ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:
நூல் வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம் • தமிழின் முதல் காப்பியம்
• உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
• முத்தமிழ்க்காப்பியம்
• முதன்மைக் காப்பியம்
• பத்தினிக் காப்பியம்
• நாடகப் காப்பியம்
• குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
• புதுமைக் காப்பியம்
• பொதுமைக் காப்பியம்
• ஒற்றுமைக் காப்பியம்
• ஒருமைப்பாட்டுக் காப்பியம்
• தமிழ்த் தேசியக் காப்பியம்
• மூவேந்தர் காப்பியம்
• வரலாற்றுக் காப்பியம்
• போராட்ட காப்பியம்
• புரட்சிக்காப்பியம்
• சிறப்பதிகாரம்(உ.வே.சா)
• பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை • மணிமேகலைத் துறவு
• முதல் சமயக் காப்பியம்
• அறக்காப்பியம்
• சீர்திருத்தக்காப்பியம்
• குறிக்கோள் காப்பியம்
• புரட்சிக்காப்பியம்
• சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
• கதை களஞ்சியக் காப்பியம்
• பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
• பசு போற்றும் காப்பியம்
சீவக சிந்தாமணி • மணநூல்
• முக்திநூல்
• காமநூல்
• மறைநூல்
• முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
• இயற்கை தவம்
வளையாபதி
குண்டலகேசி • குண்டலகேசி விருத்தம்
• அகல கவி
கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு:
• பெயர் = கம்பர்
• ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
• தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
• மகன் = அம்பிகாபதி
• மகள் = காவிரி
ஆசிரியரின் சிறப்பு பெயர்:
• கவிச்சக்ரவர்த்தி
• கவிப்பேரரசர்
• கவிக்கோமான்
• கம்பநாடுடைய வள்ளல்
இவரின் படைப்புகள்:
• ஏர் எழுபது
• சிலை எழுபது
• திருக்கை வழக்கம்
• சரஸ்வதி அந்தாதி
• சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)
கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:
• கம்பசித்திரம்
• கம்பநாடகம்
• தோமறுமாக்கதை
• இயற்கை பரிணாமம்
நூல் அமைப்பு:
• காண்டம் = 6
• படலம் = 113
• மொத்த பாடல்கள் = 10569
• முதல் படலம் = ஆற்றுப்படலம்
• இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்:
• பால காண்டம்
• அயோத்தியாகாண்டம்
• ஆரண்யகாண்டம்
• கிட்கிந்தா காண்டம்
• சுந்தர காண்டம்
• யுத்தகாண்டம்
• ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய "உத்தர காண்டம்"
சிறப்பு:
• மு.இராகவையங்கார் = "வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
• வ.வே.சு.ஐயர் = "கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்"
• எஸ்.மகாராஜன் = "உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை"
• பாரதியார் = "கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்கிறார்.
• பாரதியார் = "கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்கிறார்.
• கவிமணி = "வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு" என்கிறார்.
• "கல்வியிற் பெரியவர் கம்பர்"
• "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்"
• "கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே"
• "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்"
• தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
• 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
பொதுவான குறிப்புகள்:
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
• கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
• கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
• வான்மீகி எழுதாத "இரணியன் வதைப் படலம்" கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
• கமபராமாயணம் ஒரு வழி நூல்
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
• கம்பார் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
• கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
• இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
• இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
• 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)
மேற்கோள்:
• தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
• எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
• இல்லாரும் இல்லை உடையாரும்
• இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
• அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
• இன்று போய் நாளை வா
• வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
• வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
• உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
• கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
• அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
No comments:
Post a Comment