இந்திய வரலாறு
131. ததாகதர் என்ற புனைப் பெயரை பெற்றவர் யார்?
புத்தர்
132. புத்தருடைய போதனைகளை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
போதி சத்துவர்கள்
133. மகாவீரரின் போதனைகளை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நிர்க்கிரந்தர்கள் அல்லது பற்றற்றவர்கள்
134. புத்தர் தனது சமய சொற்பொழிவை முதன் முதலில் எந்த இடத்தில் தொடங்கினார்?
வாரணாசியில் உள்ள சாரநாத் மான் பூங்காவில்
135. புத்தர் முதலில் யாரிடம் சீடராக இருந்தார்?
அரத கலமா
136. புத்தரின் குரு அல்லது ஆசிரியர் யார்?
அரத கலமா
137. புத்தர் இரண்டாவதாக யாரிடம் சீடராக இருந்தார்?
ருத்ரகா
138. புத்தர் இறக்கும் பொழுது அவரின் வயது என்ன?
80 வயது
139. புத்தர் எந்த இடத்தில் இறந்தார்?
குசிநகரம்
140. குசிநகரம் தற்பொழுது உள்ள மாநிலம் எது?
உத்திர பிரதேசம்
141. புத்தர் தனது சமயக் கருத்துக்களைப் பரப்ப ஒரு நாளைக்கு ———கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொண்டார்.
30 கிலோ மீட்டர்
142. நான்கு மேலான உண்மைகளை உலகிற்கு அளித்தவர்?
புத்தர்
143. நான்கு மேலான உண்மைகள் ———— என அழைக்கப்படுகின்றது.
ஆர்ய சத்யங்கள்
144. எண் வழிப்பாதையை பற்றி கூறியவர் யார்?
புத்தர்
145. புத்தரின் எண்வழிப்பாதை ———— என்று அழைக்கப்படுகின்றது.
அட்டமார்க்கம் (அல்லது) மத்திய மார்க்கம்
146. திரிபீடகம் என்பது எந்த மதக் கருத்தினை உள்ளடக்கிய நூல்?
புத்த மதம்
147. புத்த சமயத்தின் புனித நூல் எது?
திரிபீடகம்
148. பீடகம் என்பதன் பொருள் என்ன?
கூடை (அல்லது) சட்டப்பேழை
149. திரிபீடகம் என்பது என்னென்ன?
சுத்தபீடகம், வினைய பீடகம், அபிதம்ம பீடகம்
150. சுத்தபீடகம் என்ற நூலை தொகுத்தவர் யார்?
ஆனந்தா
No comments:
Post a Comment