1521. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணையிலுள்ள இருநூற்றுப் பத்தாவது பாடலைப் பாடியவர் யார்?
மிளைகிழான் நல்வேட்டனார்
1522. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"அரி" என்னும் சொல்லின் பொருள் என்ன?
நெற்கதிர்
1523. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"நல்" என்னும் அடைமொழி பெற்ற நூல் எது?
நற்றிணை
1524. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"செறு" என்னும் சொல்லின் பொருள் என்ன?
வயல்
1525. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"யாணர்" என்னும் சொல்லின் பொருள் என்ன?
புதுவருவாய்
1526. 10-ஆம் வகுப்பு | தமிழ் |"வட்டி" என்னும் சொல்லின் பொருள் என்ன?
பனையோலைப்பெட்டி
1527. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புறநானூற்றின் இருநூற்றுப் பதினெட்டாம் பாடலைப் பாடியவர் யார்?
கண்ணகனார்
1528. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கண்ணகனார் எந்த மன்னனின் அவைக்களப்புலவர்களுள் ஒருவர்?
கோப்பெருஞ்சோழன்
1529. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது யாருடைய வருகைக்காக காத்திருந்தான்?
பிசிராந்தையார்
1530. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய கலைகள் எத்தனை?
அறுபத்து நான்கு
1531. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேடைப்பேச்சுக்கு_____உயிர் நாடி.
கருத்துகள்
1532. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி முடிவு எனப் பகுத்துப் பேசுவதையே _____ என்கிறோம்.
பேச்சுமுறை
1533. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேடைப் பேச்சினைத் தொடங்கும் போது எவ்வாறு தொடங்க வேண்டும்?
எடுப்புடன்
1534. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை_____ எனப்படும்.
தொடுத்தல்
1535. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
உணர்ச்சி
1538. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வினா எத்தனை வகைப்படும்?
அறிவினா, அறியாவினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறுவகைப்படும்
1539. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா _____ஆகும்.
அறிவினா
1540. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது _____ஆகும்.
அறியாவினா
No comments:
Post a Comment